சென்னை: அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி புதிய அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட அரங்குக்கு அனிதா பெயர் சூட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து 2017 செப்டம்பர் 1-ல் அனிதா தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்.
