சென்னை: ‘இலங்கை கடற்கடையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையிலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் தங்களது எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தாலும் எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. மேலும், தமிழக மீன்வர்கள் தாக்குதலுக்கு உள்ளதாவதாக என்ற அச்சத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். தமிழக எல்லைக்குள் அமைதியான முறையில் மீன்பிடிப்பதற்கும் உரிமை மறுப்பது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு 16 மீனவர்கள் மற்றும் படகுகளுடன் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
