திருவள்ளூர்: திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவும், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளருமான ஆ.கிருஷ்ணசாமி ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பூந்தமல்லி நகரம், மேல்மாநகரில் நடந்தது. ஆதிதிராவிட நலக்குழு இணை செயலாளர் வி.பி.ராஜன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, 1வது வார்டு வட்ட செயலாளர் கே.எம்.சுகுமாரன், நகரமன்ற உறுப்பினர் ச.தாமரை கண்ணன் வரவேற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினரான அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, வி.ஜெ.சீனிவாசன் காயத்ரி ஸ்ரீ தரன், எஸ்.ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், கு.விமல்வர்சன், ஒன்றிய செயலாளர்கள் டி.தேசிங்கு, ஆர்.ஜெயசீலன், தங்கம் முரளி, டி.ராமகிருஷ்ணன், பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பேரூராட்சி தலைவர் உ.வடிவேல், துணை தலைவர் க.ஸ்ரீதரன், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் எம்.பர்கத்துல்லாகான், பரமேஸ்வரி கந்தன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் தி.க.பாஸ்கர், நகர நிர்வாகிகள் எச்.தாஜுதீன், துரைபாஸ்கர், பி.ஆர்.பி.அப்பர் ஸ்டாலின், டில்லிராணி மலர்மன்னன், சு.அசோக்குமார், ஜெ.சுதாகர், ப.அன்பழகன், இரா.புண்ணியகோட்டி, பி.சௌந்தரராஜன், அமிதாப் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், வட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.