×

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது

மும்பை: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. ஜூன் மாதம் இங்கிலாந்து ஓவலில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் பல்வேறு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றதை அடுத்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில், புள்ளிகளின் அடிப்படையில் 68 புள்ளிகளுடன் முதல் அணியாக ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.

60 புள்ளிகளாய் பெற்ற இந்தியா 2-வது அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றினால் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெரும் என்ற சூழல் இருந்தது. அதேபோல் இலங்கைக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், நியூசிலாந்து - இலங்கை இடையேயான போட்டியில், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் மட்டுமே இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெரும் என்ற சூழல் இருந்த நிலையில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதன் மூலம் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. 2-வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.


Tags : Indian ,ICC Test Championship , ICC Test Championship, Final, Team India
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்