திருவாரூர்: நீடாமங்கலத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த 13 பேரை கைது செய்து நீடாமங்கலம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பூவனுர் ராஜ்குமார் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றபோது கலவரம் ஏற்பட்டது.