×

16 தமிழ்நாடு மீனவர்கள் கைது இலங்கை அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ராமதாஸ்  வெளியிட்ட டிவிட்டர் பதிவு: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை  அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  தமிழ்நாட்டு மீனவர்கள் அவர்கள் பாரம்பரியமாக மீன்  பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால் கூட அவர்களை சிங்களக்  கடற்படையினர் கைது செய்கின்றனர். இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மரபுவழியாக  வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை பறிக்கும் செயலாகும்.

இதை அனுமதிக்கக்  கூடாது.  தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும்,  அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை  இழந்துள்ளனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20  குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீனவர்கள்  சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்.16 மீனவர்களையும், படகுகளையும்  மீட்க நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும்.

Tags : Tamil Nadu ,Ramadoss , Arrest of 16 Tamil Nadu fishermen must end Sri Lankan atrocities: Ramadoss insists
× RELATED ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்