×

சபரிமலையில் நாளை நடை திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை   திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படும். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 15ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்மய பூஜை, புஷ்பாபிஷேகம் மற்றும் படிபூஜை ஆகியவை நடைபெறும்.

19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். நிலக்கல்லில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக வரும் 26ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். 27ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.      ஏப்ரல் 5ம் தேதி பிரசித்தி பெற்ற ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றுடன் 10 நாள் திருவிழா நிறைவடையும்.

Tags : Sabarimala , Sabarimala walk opens tomorrow
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு