×

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது; இலங்கையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள், அவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால் கூட அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.

இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மரபுவழியாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்கக் கூடாது.  தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20 குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Sri Lanka ,Ramadoss , 16 Tamil Nadu fishermen arrested; Sri Lanka's atrocities must end: Ramadoss insists
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்.....