×

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் ஜார்ஜ் ஆபிரகாமை சைதாப்பேட்டை மகளிர் போலீஸ் கைது செய்தது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வரும் ஜார்ஜ் ஆபிரகாம் மீது 23 வயதான ஒரு மாணவி கடந்த டிசம்பர் 2ம் தேதி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஓய்எம்சிஏ கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கடந்த 9-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து சைதாப்பேட்டை மகளிர் போலீசார் விசாரணை செய்த நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அந்த கல்லூரியின் முதல்வர் அத்துமீறியது தெரியவந்தது.

இதையடுத்து நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமை சைதாப்பேட்டை மகளிர் போலீஸ் கைது செய்தனர்.

Tags : Chennai ,Nandanam ,YMCA ,George Abraham ,Chief Minister of Physics College , Chennai Nandanam YMCA Physical Education College Principal George Abraham arrested
× RELATED சிறந்த மதசார்பற்ற பிரதமரை...