×

புல்வாமா தியாகியின் மனைவியை போலீசார் தள்ளிவிட்ட விவகாரம்: ராஜஸ்தானில் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டை வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கு பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களின் மனைவியரில் 3 பேர் ராஜஸ்தான் அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர். அவர்கள் சமீபத்தில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ராவை நேரில் சந்தித்து தங்களது வாழ்வை முடித்து கொள்ள அனுமதி கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்திற்கு செல்ல முயன்றபோது அவர்களை தடுத்த போலீசார் வீரர் ரோகிதசாவ் லம்பாவின் மனைவி மஞ்சு ஜாட்டை கீழே தள்ளிவிட்டத்தில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் முதலமைச்சர் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல பாஜகவினர் முயன்றனர்.அப்போது போலீசார் தடுத்ததால் பாஜகவினர் போலீசாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கணக்கான பாஜகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. ஏராளமான பாஜகவினர் காவல்துறை வாகனம் மீது ஏறியதால் பதற்றம் நிலவியது.


Tags : Pulwama Martyr ,BJP ,Chief Minister ,Rajasthan , Pulwama, Martyr, Wife, Abandoned, Rajasthan, Chief Minister, BJP, Protest
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்