சிவகங்கை : சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஓ பன்னீர் செல்வம் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.பழனிசாமி கட்சியை விட்டு விலக கோரி மருது அழகுராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.