சென்னை : என்எல்சியால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டுக்குள் என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்றும் என்எல்சியை தனியாருக்கு விற்கும் நிலையில் எதற்காக 10,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி வினவியுள்ளார்.