டெல்லி :தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். அமலாக்கத்துறை கவிதாவை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக அவரது கட்சி நேற்று குற்றம் சாட்டியதோடு இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியிருந்தந்து.