மதுரை : சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரேத பரிசோதனையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிறப்பித்தது. அதில், ந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை இறந்தவரின் குடும்பத்திடம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கையின் நகல் மற்றும் வீடியோ ஆகியவை ஒரே நேரத்தில் குடும்பத்தினரிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.