பாட்னா : பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.லாலு பிரசாத் யாதவ் ஒன்றிய அமைச்சராக இருந்த போது, ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றே விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.