குருகிராம்: இந்தியாவின் மிகப்பெரிய ஓட்டல் புக்கிங் நிறுவனம் ஓயோ ரூம்ஸ். இதன் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலுக்கும் லக்னோவை சேர்ந்த கீதன்ஷா சூட் என்பவருக்கும் நேற்றுமுன்தினம் திருமணம் நடந்தது. குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரித்தேஷின் தந்தை ரமேஷ் வசித்து வந்தார்.
நேற்று அடுக்குமாடி குடியிருப்பின் 20 வது மாடியில் இருந்து ரமேஷ் கீழே விழுந்து மரணமடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. சடலத்தின் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.