சென்னை: ஆவணக் கொலை தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொதுவெளியில் நடந்தால்தான் மக்களை சென்றடையும் என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உடுமலை சங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல், சாதி மறுப்பு திருமண விழிப்புணர்வு கூட்டம் நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் சமூக நீதி அறக்கட்டளை தரப்பில் கவுசல்யா தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.