சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட கூட்டுறவுத்துறை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருகிறது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நகைக்கடனும் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.