தூத்துக்குடி: தூத்துக்குடி வேம்பார் கடற்கரையில் 21 பைகளில் இருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள திருக்கை மீன் இதழ், சுறா துடுப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில் கியூ பிரிவு போலீஸ் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடத்தலில் ஈடுப்பட்ட ராமநாதபுரம் வேதாளையைச் சேர்ந்த சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது.