சென்னை: என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். என்.எல்.சி. ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர்.