சென்னை: முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. முத்திரைத்தாள்களில் குறிப்பிட்டுள்ள விலை அடிப்படையிலேயே அதனை விற்க வேண்டும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
