×

ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகி கைது

சென்னை: திருச்சி மாவட்டம், முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமாரி (35). இவர், வடுகபட்டியில் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறார். இவரது மில்லுக்கு செவந்தலிங்கபுரத்தை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் அபினேஷ் (27), அவரது அண்ணன் பிரவீன்கிஷோர் (29) ஆகியோர் கட்சியின் வளர்ச்சி நிதிக்காக ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வசந்தகுமாரி கொடுத்த புகாரின்பேரில் முசிறி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து புரட்சிபாரதம் கட்சி மாவட்ட செயலாளர் அபினேஷை கைது செய்தனர். இவரது அண்ணன் பிரவீன்கிஷோரை தேடி வருகின்றனர்.

Tags : Revolution Bharat Party , Revolution Bharat Party district executive arrested for threatening Rs 1 lakh
× RELATED அதிமுக கூட்டணியில் தொடர்வதா? என 2...