×

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக திமுக கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு: மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி மன்ற 62வது வார்டு உறுப்பினர் க.ஜெயச்சந்திரன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி(சஸ்பெண்ட்)வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kazhagam ,Tremurugan , Disciplinary action against DMK councilor for violating party control: Duraimurugan announcement
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...