×

நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும்-இரவல் ஆளுநர் வேண்டாம்: புதுச்சேரி சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏ நேரு முழக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசை உரையாற்றிய போது நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும் இரவல் ஆளுநர் நியமிக்க வேண்டாம் என பதாகையை காண்பித்து ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர், பாரதியாரின் வரிகளை வாசித்து ஆளுநர் தமிழிசை உரையாற்றினார்.

அப்போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு எழுந்து நின்று கையில் இருந்த பதாகையை காண்பித்தார். அதில் ஒன்றிய அரசே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநரை நியமித்திடு, வேண்டும் வேண்டாம் இரவல் ஆளுநர் வேண்டாம் என எழுதி இருந்தது. அதனை பார்த்த பேரவை தலைவர் செல்வம் எம்.எல்.ஏ நேருவை இருக்கையில் அமரும்படி தெரிவித்தார். ஆனால், நெடுநேரம் நின்றிருந்த ஆளுநர் பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.    



Tags : MLA ,Nehru ,Puducherry Legislative Assembly , Permanent, Governor, Appoint, Night, Do Not, Puducherry, Legislature, Nehru, Slogan
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்