×

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்துள்ளது: கோவையில் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

கோவை: கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களின் புதுகாப்பு தொடர்பான ஆலோசனை நடத்திய பின் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர் சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்; புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்துள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து பதற்றத்தை ஏன் ஏற்படுத்துகிறார்கள் என்று விசாரித்து வருகிறோம். புலம்பெயர் தொழிலார்கள் குறித்து தவறான தகவல் பரப்பியதாக 11 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊர் சென்றனர். தமிழ்நாட்டில் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கலாம் என தகவல். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர்களை பிடிக்க டெல்லி, பீகார், மத்திய பிரதேசத்தில் தனிப்படை முகம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,DGB ,Sailendrababu , diaspora, labor, affairs, tension, eased, coimbatore, dgp, sailendrababu, interview
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...