×

ஜெயலலிதாவைவிட தனது தாயாரும் மனைவியும் பல மடங்கு சக்தி வாய்ந்தவர்கள்: அண்ணாமலை பேச்சால் மீண்டும் சர்ச்சை..!!

சென்னை: தேர்தலில் டெபாசிட் இழந்தவர் ஜெயலலிதா என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது ஜெயலலிதா போன்ற தலைவர் என்று கூறியது பற்றிய செய்தியாளர் கேள்விக்கு தன்னை யாருடனும் ஒப்பிடவில்லை என அண்ணாமலை விளக்கம அளித்தார். ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்தாலும் மீண்டு வந்தார் என்பதற்காகவே அவ்வாறு பேசியதாகவும், அதுபோல் தானும் செயல்படுவேன் என  அண்ணாமலை கூறினார்.

ஜெயலலிதாவைவிட எனது மனைவி சக்தி வாய்ந்தவர்:

ஜெயலலிதாவைவிட தனது தாயாரும் மனைவியும் பல மடங்கு சக்தி வாய்ந்தவர்கள் என்ற அண்ணாமலை பேச்சால் சர்ச்சை ஏற்பட்டது. எனது தாய் ஜெயலலிதாவை விட நூறு மடங்கு சக்தி வாய்ந்தவர்; எனது மனைவி ஜெயலலிதாவைவிட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவர் எனவும் கூறினார். தான் ஜெயலலிதா போன்ற தலைவர் என அண்ணாமலை பேசியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் சர்ச்சை ஏற்படும் வகையில் பேசியுள்ளார்.

அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை: செல்லூர் ராஜு

அண்ணாமலை வாய்க்கொழுப்புடன் பேசுகிறார்; தமிழகத்தில் ஒருபோதும் பாஜக வளராது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎஸ் படித்துவிட்டதால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ரீதியில் அண்ணாமலை செயல்படுவதாகவும் செல்லூர் ராஜு கண்டனம் தெரிவித்தார்.


Tags : Jayalalitha ,Annamalai , Jayalalithaa, wife, Shakti, Annamalai talk
× RELATED சொல்லிட்டாங்க…