கோவை: பொள்ளாச்சி அருகே நல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சபரிநாத் உயிரிழந்தார். தீ விபத்தில் உயிரிழந்த சபரிநாத், சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தீ விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் சபரிநாத், அவரது வீட்டில் குடியிருந்த சாந்தி ஆகியோர் உயிரிழந்தனர். வீட்டில் குளிர்பதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.