×

திருச்சி திருவெறும்பூரில் மின்சார வாரிய கூடுதல் பொறியாளர் சஸ்பெண்ட்..!!

திருச்சி: திருச்சி திருவெறும்பூரில் மின்சார வாரிய கூடுதல் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஒரே வளாகத்திற்குள் 1க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்புகளை இணைக்க நோட்டீஸ் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய தலைவரின் உத்தரவை நிறைவேற்றிய கிருஷ்ணமூர்த்தியை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற மனு அளிக்கப்பட்டுள்ளது. தலைமை பொறியாளரிடம் மின்வாரிய கூட்டு நடவடிக்கை குழு அளித்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.


Tags : Trichy Thiruvedumpur , Trichy Tiruverumpur, Electricity Board Additional Engineer, Suspended
× RELATED தமிழகத்தின் ராஜபக்சேவாக எடப்பாடி உருவாகி உள்ளார்: தினகரன் தாக்கு