சென்னை: பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் வகையில் ஒன்றிய அரசு அறிவிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமசாமி என்பவரின் சொத்தில் மனைவி, மகளுக்கு சமபங்கு கொடுக்க கோரிய உத்தரவை எதிர்த்து மகன்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.