×

அடுக்குமாடிக் கட்டிடத்தில் இயங்கி வந்த வங்கி, அலுவலகம், கடைகளில் வேதியியல் பொருட்கள் வெடித்த விபத்தில் 17 பேர் பலி..!!

டாக்கா: வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள பழைய டாக்கா நகரில் உள்ள குலிஸ்தான் பகுதியில் 7 மாடிக் கட்டிடத்தில் வங்கி அலுவலகம், கடைகள், அலுவலகங்கள் இயங்கிவந்தன. இந்நிலையில் நேற்று மாலை கட்டிடப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினரும், போலீசாரும் விரைந்தனர். அங்கிருந்த இடிபாடுகளை அவர்கள் அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கட்டிடத்தின் தரைப்பகுதியில் சட்டவிரோதமாக வேதியியல் பொருட்களை சேகரித்து வைத்து இருந்தனர். அதுவே வெடிவிபத்துக்குக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த வெடிவிபத்தில் வங்கியின் கண்ணாடி சுவர்கள் உடைந்து விழுந்ததுடன், சாலையின் எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தும் சேதமடைந்தது. வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.



Tags : Apartment, Building, Bank, Office, Shop, Chemistry, Products, Accident, Casualty
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...