சென்னை: இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை பதிவு செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு எழும்பூர் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த கல்யாணராமன், மோதலை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது.