சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.