×

எகிப்தில் ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி

கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்தில் சிக்கிய ரயில் ராம்செஸ் ரயில் நிலையத்திலிருந்து மெனாஃப் நகருக்கு சென்று கொண்டிருந்தது. கெய்ரோவின் கலியூப் ரயில் நிலையத்தை நெருங்கியபோது திடீரென ரயில் தடம் புரண்டது.

இந்த விபத்தில் 2 பயணிகள் பலியாகினர். 16க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ என்றனர்.

Tags : Egypt , 2 killed in train derailment in Egypt
× RELATED கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்