மதுரை: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு எதிரான வழக்கில் மார்ச் 13ல் விரிவான விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கட்டுமானப் பணிகள், பாதுகாப்பு வசதிகள் முழுமையாக முடியும் வரை சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. விரிவான விசாரணைக்காக வழக்கை மார்ச் 13ம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மார்ச் 1ல் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மனுதாரர் தரப்பில் ஏற்கனவே முறையீடு செய்யப்பட்டிருந்தது.