சென்னை: கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பது முட்டாள்தனமான செயல் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். பழனிசாமி உருவப் படத்தை பாஜகவினர் எரித்தது முட்டாள்தனமான செயல் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கண்டனம் தெரிவித்தார். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது இயல்புதான்; அதில் எந்த தவறும் இல்லை. அண்ணாமலை தலைமையை விரும்பாதவர்கள் அதிமுகவில் இணைகின்றனர் எனவும் தமிழ்மகன் உசேன் கூறினார்.