×

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை நேரில் காணும் இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள்..!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நாளை தொடங்கும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்தியா - ஆஸ்திரேலியா பிரதமர்கள் பார்க்கின்றனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இதில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது.

முதல் நாள் ஆட்டத்தை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியுடன் நடந்த 3வது டெஸ்டில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கும் முன்னேறி அசத்தியது. இதே போல, 4ம் டெஸ்ட் போட்டியில், வென்றால் இந்திய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறலாம்.

இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் பார்க்க உள்ளனர். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று இந்தியா வருகிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Test match , Cricket, Stadium, Test
× RELATED `அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட்...