×

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை கழிவுகள் எரிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500க்கும் அதிகமான பன்னாட்டு தொழிற்சாலை உள்ளது. இந்த, தொழிற்சாலைகளில் வீணாகும் கழிவுகளை, தனியார் சிலர் ஸ்ரீபெரும்புதூர் சுற்றி உள்ள காப்புக்காடு மற்றும் ஏரியையொட்டி கொட்டி எரித்து வருகின்றனர். மேலும், ஒருசிலர் லாரிகளில் ஏற்றிவந்து தனியாருக்கு சொந்தமான நிலங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். தற்போது, ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயக்குளத்தூர் பகுதியில் தரிசு நிலத்தில் தொழிற்சாலைகளின் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் திடீரென தொழிற்சாலை குப்பை தீப்பற்றி எரிய தொடங்கியது. அதனை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் புகை மண்டலமாக கட்சியளித்தது.

Tags : Sriperumbudur , Industrial waste burning near Sriperumbudur
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு