×

மும்பையை சேர்ந்த பக்தர் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு வைர வளையல் காணிக்கை

காஞ்சிபுரம்: கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் மகாசக்தி பீடங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலை தரிசனம் செய்ய நாள் தோறும் பல்வேறு மாநில பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் என வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, மாசி மக பிரம்மோற்சவ விழா, கடந்த 10 தினங்களாக கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதியுடன் வந்து, 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்நிலையில், இக்கோயில் மூலவரான காமாட்சி அம்மனுக்கு, மும்பையை சேர்ந்த தொழிலதிபர், சென்னையை சேர்ந்த ஒருவர், கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேசனிடம் ஒரு ஜோடி வைர வளையலை காணிக்கையாக வழங்கினார். இதன் மதிப்பு சுமார் ரூ.1.58 லட்சத்தில் 21.868 கிராம் எடையுள்ள 26 வைர கற்கள் பதிக்கப்பட்ட வளையலை காணிக்கையாக வழங்கினார். இந்த வைர வளையல் உடனடியாக காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

Tags : Mumbai ,Kanchi Kamachi , A devotee from Mumbai presents a diamond bangle to Goddess Kanchi Kamachi
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...