×

பெரியபாளையத்தில் பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்

பெரியபாளையம்: பெரியபாளையத்தில் பேராசிரியர் கா.அன்பழகன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பேராசிரியர் படத்திற்கு, மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பிஜே.மூர்த்தி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஏவி.ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி விபி. ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் சித்ராமுனுசாமி, மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தனசேகரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வடமதுரை அப்புன், நிர்வாகிகள் இ.ராஜா, பார்த்திபன், ஏனம்பாக்கம் சம்பத், காக்கவாக்கம் ஊராட்சி தலைவர் சுமன், கார்த்திக், வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Prof. ,Anbazagan ,Memorial Day ,Periyapalayam , Prof. Anbazagan Memorial Day at Periyapalayam
× RELATED கவுன்சலிங் ரூம்