கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை, சுண்ணாம்புகுளம் மற்றும் ஆரம்பாக்கத்திலும் பேராசியர் அன்பழன் நினைவு நாள் தினத்தை முன்னிட்டு திமுக தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பெருவாயல் பகுதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமையில் பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள் நிகழ்சி நேற்று நடந்தது.
ஒன்றிய நிர்வாகிகள் கே.இ.திருமலை, சுரேஷ், துர்காதேவி வெங்கடேசன், மூர்த்தி, புலியூர் புருஷோத்தமன்,ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், திமுக தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, திமுகவினர் பேராசிரியர் அன்பழகன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதே போன்று, ஆரம்பாக்கத்தில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் தலைமையிலும், சுண்ணாம்புகுளத்தில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பரிமளம் தலைமையிலும் பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.