×

பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை சந்திப்பு: ஓபிஎஸ் தாயார் படத்திற்கு மரியாதை செலுத்தி ஆறுதல்..!

தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி இரவு 10 மணியளவில் பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.  ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்றார்.

அங்கு ஓ.பி.எஸ். இல்லத்திற்கு சென்ற அண்ணாமலை, அவரது தாயார் படத்திற்கு மரியாதை செலுத்தி ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை கூறியதாவது; தமிழக முன்னாள் முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்குச் சென்று, அவரது தாயார் பழனியம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மன வலிமையை ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற இறைவனை வேண்டுகிறேன். தாயாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : O. ,Anamalai ,Pannerselvam , Annamalai meeting with O. Panneerselvam at Periyakulam: OPS Thayar film is comforted..!
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஐயா...