சென்னை: மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் இரு குட்டிகளை யானைகள் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்துடன் சேர்க்க முடியாவிட்டால் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு குட்டிகள் கொண்டு செல்லப்படும். தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை பராமரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.