×

ஆன்லைன் சூதாட்ட பலிக்கு ஆளுநரே முழு பொறுப்பு: முத்தரசன் பேட்டி

திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் அளித்த பேட்டி: தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா, ஆளுநர் மாளிகையில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தொடர்ந்து பலி ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபோன்ற தொடர் பலிகளுக்கு ஆளுநரே முழு பொறுப்பு. வட மாநிலத்தவர் குறித்து தவறான தகவல்களை பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உர விற்பனையில் தற்போது புதிதாக ஜாதி வாரியாக தகவலை ஒன்றிய அரசு கேட்டு வருவது கண்டனத்துக்குரியது. இதை திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Governor ,Mutharasan , Governor fully responsible for online gambling victim: Mutharasan interview
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...