×

பொன்னேரியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரியில் உள்ள காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு குற்ற வழக்கு சம்பந்தமாக பொதுமக்கள் வழங்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பொன்னேரி அண்ணாசிலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் நேற்று கிழிக்கப்பட்டிருந்தது.

புகார் மீது நடவடிக்கை எடுக்காதது மற்றும் பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து நேற்று மாலை பொதுமக்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள், பொன்னேரி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னேரி நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில், ‘பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக எடுப்பதில்லை. ஒரு போலீஸ் அதிகாரி கொடுத்த புகார் மீது கூட நடவடிக்கை எடுப்பதில் தாமதப்படுத்துகின்றனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம்’ என்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Ponneri , Public protest in Ponneri
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...