×

திருவள்ளூரில் பரபரப்பு மூட்டையாக கட்டி சாலையில் வீசப்பட்ட காலாவதியான கூல்டிரிங்ஸ்

திருவள்ளூர்: திருவள்ளூர் சி.வி.என்9. சாலையோரத்தில் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, பஸ் நிலையம் அருகே சாலையோரம் 3 மூட்டைகள் கிடந்தது தெரியவந்தது. சிலர், அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதற்குள் கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் இருந்தது. உடனே அவற்றை எடுத்து குடிக்க ஆரம்பித்தனர். இதை பார்த்ததும் ஏராளமானோர் ஓடி வந்து, எடுத்து சென்றனர்.

இந்த தகவலை அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கிருந்த பொதுமக்களை விலக்கி விட்டு, மூட்டைகளை பிரித்து பார்த்தனர். 100க்கும் கூல்ட்ரிங்ஸ் பாட்டில்கள் இருந்தது. அந்த பாட்டில்களை எடுத்து சோதனை செய்தபோது காலாவதியான குளிர்பானம் என தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். கூல்டிரிங்க்ஸ் பாட்டில்களை மூட்டையாக கட்டி போட்டது யார் என்பது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



Tags : Tiruvallur , Expired cooling rings piled up and thrown on the road in Tiruvallur
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற...