பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதலாவது நிலையில் உள்ள 3வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதே போல 2வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இரு அலகுகளிலும் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மின்தட்டுப்பாடு ஏற்படும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.
