சென்னை: குலசேகரன்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா, விண்வெளி எரிபொருள் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குலசேகரன்பட்டினம் செயற்கைக்கோள் ஏவுதளம் அருகே விண்வெளி தொழில் பூங்காக்களை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின்னணு, பொறியியல் கட்டமைப்புகள், வான்வெளி இயந்திரங்களுக்கான ரசாயனங்களை உற்பத்தி செய்வதற்காக தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது.