தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே இறந்த 3 யானைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி துவங்கியது. 3 யானைகளின் உடல்களை சுற்றி வரும் 2 யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 3 யானைகள் இறப்பதற்கு காரணமான மின்வேலி அமைத்த விவசாயி முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.