×

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சிறப்பான நடவடிக்கை: பீகார் மாநில அதிகாரி

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது என பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி அளித்துள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தாக்குவது போன்ற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த போலி செய்தியால் சிறிய அச்ச உணர்வு தொழிலாளர்களிடம் ஏற்பட்டது, அனைவரும் தற்போது உண்மை நிலை தெரிந்துள்ளது, மேலும் தமிழ்நாடு போலீஸ் மற்றும் பிற அமைப்புகள் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவை அனைத்தும் வதந்தி என நிரூபணம் ஆகியுள்ள நிலையில் தொழிலாளர்கள் இடையே இருந்த அச்ச உணர்வு நீங்கி சகஜ நிலைக்கு வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்து கேட்ட பின் பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி அளித்துள்ளார்.



Tags : North State ,Bihar , Excellent action on North State workers issue: Bihar state official
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...