×

டெல்டா, டெல்டா அல்லாத மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் 6 மணி நேரம் விநியோகம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் குரூப் 1, குரூப் 2 என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. காலை நேரத்தில் 8.30 மணியில் இருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அதேபோல், இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இதேபோலவே, டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9.30 மணியில் இருந்து மதியம் 3.30 மணி வரைக்கும் இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : delta ,Tamilnadu , Delta, Non-Delta Districts, Three Phase Electricity, Tamil Nadu Govt Notification
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!